News7 Tamil
முதல்வர் சிறைக்கு சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என நினைப்பது ஜனநாயகமல்ல: சீமான்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றுவிட்டால் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைப்பது ஜனநாயகமல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுவதையொட்டி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சாவூரில் மாமன்னன் ராஐராஐசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தனித்துபோட்டியிடும் என்று கூறினார்.
Post a Comment