Dinamalar
நாம் தமிழர் கட்சியினர் மீது போலீஸ் வழக்கு
விருத்தாசலம் : அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய, நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பஸ் நிலையம் அருகே 'இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு திருச்சியில் கூடுவோம்' என்ற வாசகங்களுடன், நாம் தமிழர் கட்சி சார்பில் அச்சகம் பெயரின்றி அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டியிருந்தன.இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தென்றல் மணி, மரியஜோசப், நித்யானந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்
Post a Comment